செவ்வாய், செப்டம்பர் 10, 2024

நந்தனை விடுதலைச் செய்வோம்!

வரலாற்று புளுகில் இருந்து 
நந்தனை விடுதலைச் செய்வோம்! 
----------------------

மக்களிடையே பக்தி உணர்வை ஏற்படுத்துவதை  ,  சமய உணர்வை  மேலோங்க செய்வதை முதன்மையான நோக்கமாக கொண்டுதான்  பக்தி இலக்கியங்கள்  படைக்கப்பட வேண்டும். அதன் ஊடாக அழகியலை, தொன்மங்களை கூட விவரிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட மக்களை குறிவைத்து அவர்களை இழிவுப்படுத்தி அவனே அவனை தான் ஓர் அடிமை எண்ணுகின்ற உளவியல் கட்டமைப்பை உருவாக்க  பக்தி இலக்கியங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. 

அதிலொன்று பெரிய புராணம். 

நமகெல்லாம் நந்தனார் கதை தெரியும்..

நந்தன் என்ற பெயர் பெரிய புராணத்தில் தான் முதன்முதலாக பதிவு செய்யப்படுகிறது. திருநாளைப் போவார் எனும் ஒற்றை வரியை வைத்து நந்தனார் கதையாக விரிவாக்கம் செய்த சேக்கிழார்  பார்ப்பனர்களுக்கும் பறையர்களுக்குமான வரலாற்றுப் பகையைப் நந்தனார் கதைக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.

சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும்  சமயக்குரவர் நால்வரில் ஒருவர். இவர் அறுபது  சிவனடியார்கள் குறித்தும்  9 தொகை அடியார்கள் குறித்தும் ஒரு நூல் இயற்றுகிறார். அந்த நூலுக்கு பெயர் திருத்தொண்டத் தொகை.

#நந்தன்1

கருத்துகள் இல்லை: