வெள்ளி, மார்ச் 01, 2024

நாகவன்ஷி

#க்ஷத்திரியர்கள்

இந்திய புராணங்கள் நான்கு வகையான க்ஷத்திரியர்கள் பற்றி குறிப்பிடுகிறது. அவை சூர்யவன்ஷி க்ஷத்திரியர்கள், சந்திரவன்ஷி க்ஷத்திரியர்கள்,  அக்னிவன்ஷி க்ஷத்திரியர்கள் மற்றும் நாகவன்ஷி க்ஷத்திரியர்கள். இவர்களுள் மிகவும் பழமையானவர்கள் நாகவன்ஷி க்ஷத்திரியர்கள். 

இந்திய நிலப்பரப்பு முழுவதும் ஆட்சியாளர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருந்த இந்த நால்வரில் மற்ற மூவரும் பிராமண கூட்டாளிகளாக மாறிப் போய்விட, நாகவன்ஷி க்ஷத்திரியர்கள் வைதீக எதிர்ப்பு மற்றும் பிராமண கலாச்சாரத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

சம்பவ குல க்ஷத்ரியர்கள் எனும் தமிழ்நாட்டின் நாகவன்ஷி க்ஷத்ரியர்களுக்கு அரச குருக்களாக  செயல்பட்ட சாம்பவர் சமூகத்தின்' ஆசான்களிடமிருந்து உருவானது தான் களரி எனும் தற்காப்புக் கலை.

சாத்தான்குளம், விளாத்திகுளம், விருதுநகர், சிங்கவனம் உள்ளிட்ட தென் தமிழகம் முழுவதும் சிறந்த ஆட்சியாளர்களாக திகழ்ந்தவர்கள் நாகவன்ஷிகளே.

பிராமணிய கலாச்சாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாக பிரபல சாத்தாங்குளம் ஆட்சியாளர் எனும் சாத்தான் குளம் ஜமீன்  கொல்லப்பட்டார். 

தூத்துக்குடி அடுத்த பரமன் குறிச்சி அருகே நடந்த பிராமணிய கலவரத்தில் வைத்து சாத்தான் குளம் ஜமீன்  கொல்லப்பட்டார். உள்ளூர் பிராமணர்களால் இயக்கப்பட்ட வேளாளர்கள் உதவியோடு சாத்தன் சாம்பவர் கொல்லப்பட்டதை பல தமிழ் நாட்டுப்புறக் கதைகள் விவரிக்கின்றன. 

பிராமணியத்திற்கு எதிரான கலாச்சாரப் போரில், நாகவன்ஷி க்ஷத்திரியர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர், அதோடு அவர்கள் கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக பிராமணியதாலும் பிராமணியத்தின் அடிவருடிகளாலும்  புறக்கணிக்கப்பட்டனர். தங்களின் புகழ்மிக்க கடந்த கால வரலாறுகளை இழந்து பிராமண சமூகத்தில் அடிமைகளாக நாகவன்ஷிகள்
மாற்றப்பட்டனர்.

நாகவன்ஷி என்ற வார்த்தையை கண்டு நீங்கள் அந்நியப் பட வேண்டாம். அதன் அர்த்தம் வேறொன்றுமில்லை, அதன் தமிழ் சொல், நாக வம்சம் என்பது தான். நாக வம்சத்தின் தலைவன் பிடாரன். பிடாரன் பிற்காலத்தில் சிவனாக உயர்வு பெற்றான். சிவனுக்கும் மூப்பன் ஆதிசேஷன். 

ஆதிசேஷன், ஆதிசேட்டன் என்கின்ற வார்த்தைகளின் வேரடி சொல் ஆதி சாத்தான். சாத்தன் என்றால் கேள்வி கேட்பவன், விவாதிப்பவன், அறிவானவன் என்றெல்லாம் பொருள். ஞானம் அடைந்தவன் என்றும் பொருள். சாத்தன் வழிபாடு இவர்களிடம் இருந்து தான் தொடங்குகிறது. சிவபெருமான், முருகன், ஐயப்பன், உள்ளிட்ட நாகவன்ஷிகளின் வழிபாட்டை ஆசிவகம் ஏற்றுக் கொண்டது. சைவம் அதனை உள்வாங்கிக் கொண்டது

#சமரன்

#ஆதிசேஷன்|#ஆதிசாத்தன்|#பறையர்|#நாகவன்ஷி|#சாத்தன்

வெள்ளி, பிப்ரவரி 09, 2024

எது சமணம் ?




இடதுசாரி இயக்கங்கள் , தலித் இயக்கங்கள்,  தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் என்றெல்லாம் பொத்தம் பொதுவாக குறிப்பிடுகின்றோமே, அதைப்போல சமணம் என்ற பெயர் கூட ஒரு பொத்தம் பொதுவான சொல்தான். வேத மறுப்பு சமய நெறிகள் யாவற்றையும் குறிக்கும் ஒரு பொதுவான பெயரே சமணம். 

ஐந்திறப் பள்ளிகள் யாத்து தந்திருந்த  மெய்க்கோட்பாட்டு இயல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டிருந்த ஹோமம், வேள்வி, யாகம், பலியிடுதல் போன்ற வழிபாட்டு வணக்க முறைகள், வட புல பொதுமக்களுக்கு பெரும் வெறுப்பை தந்தன. 

வைதீக கூட்டத்தினருக்கு ஆட்சியாளர்களின் செல்வந்தர்களின் ஆதரவு இருந்ததால், பொதுமக்களின் இந்த வெறுப்பை அவர்கள் பொருட்படுத்தவே வில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் வைதீக எதிர்ப்பு குழுக்கள் முளைத்தன. இந்த குழுக்களுக்கு அறிவுரைகள் | வழிகாட்டுதல்கள் மற்றும் வைதீக வழி வணக்க முறைகளை எதிர்ப்பதற்கான முறையான செயல்திட்டங்கள் தமிழ் கணியர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. 

வைதீக எதிர்ப்போடு கணியர்களின் மெய்யியல் தத்துவார்த்தங்களையும் மக்களிடம் பரப்பிடவும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டன. இந்த குழுக்களே பின்னாளில் சாவகர், அருகர் என்றெல்லாம் அறியப்பட்டன. ஒட்டுமொத்த இந்த குழுவினர் பொத்தாம் பொதுவாக சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். 

சாவகர்கள் நீண்ட விரிந்த சடையோடும் அருகர்கள் முழுவதும் மழித்தும் தங்களை உருவகப்படுத்திக்கொண்டனர். சமணக்கொள்கை கோட்பாடுகள் எழுச்சிப் பெற்று பொது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுவந்த அதே வேளையில்  அவர்களுக்குள் பகை உணர்வும் வளர்ந்தது. தங்களது வளமான வாழ்க்கை, வருவாய் பாதிப்படைவது கண்டு,  பெருங்கோபத்துடன் காத்திருந்த வைதீக கூட்டத்தினர் சமணர்களின் பகை உணர்வை பயன்படுத்தி அவர்களுக்குள் மோதிக்கொள்ள வழிவகை செய்தனர். 

வைதீக எதிர்ப்பை விட்டுவிட்டு ஆங்காங்கே தங்களுக்குள் மோதிக்கொண்டனர். 
 “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்” என்று இந்த சாவக / அருக சகோதர பகையை கணியர்கள் கண்டித்து புத்திமதி சொல்லி ஒருசேர அனுப்பி வைத்த விவகாரங்கள் வெளியில் தெரிய வர சமணர்களுக்கு பின்புலமாக கணியர்கள் இருந்த கதையெல்லாம் வைதீகர்களுக்கு தெரிய வந்தது. 

அப்புறமென்ன..? 

சமணர்கள் மீது இருந்த கோபம் கணியர்கள் மீது திரும்பியது  
ஐந்திறப்  பள்ளிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கணியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சாவகர்களும் அருகர்களும் தென்புலம் நகர்ந்தனர். 

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வைதீக எதிர்ப்பு நெறிகள் அழித்தொழிக்கப்பட்ட போது அருகத்தை தழுவி வட புலத்தில் உருவான ஒரு சமயமே ஜைனம். இதனை நிகண்டுகள் பிற்காலத்தில் சமணத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டன. இதனாலேயே ஜைனம் தான் சமணம் என்றொரு தவறான கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது.

#சமணம்|#சாவகம்|#அருகம்|#சமணம்|#கணியர்|#ஐந்திறப்பள்ளி