திங்கள், பிப்ரவரி 16, 2026

சிகை கொற்றனும் முடி நாகனும்



முன்பு...

எகிப்தின் செங்கடல் துறைமுக நகரமான பெரெனிகேவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் பானை ஓரி கொற்றன்" (Panaiori Korran) என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

இதைப்போன்றே..

எகிப்தின் மன்னர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில் தமிழி கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளது. இந்த உலக வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆண்டாண்டு காலமாக, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் பார்வையிட்டு வரும் இந்த இடத்தில், தமிழி கல்வெட்டுக்கள் இருப்பது, யாருடைய கவனத்திற்கும் வராது போனது எப்படி?  என்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். 

இக்கல்லறை தமிழி கல்வெட்டுகளில் பெரிதும் கவனம் ஈர்த்த பெயர் 

𑀘𑀻 𑀓𑁃 𑀓𑁆 𑀓𑁄 𑀶𑁆 𑀶 𑀷𑁆

சிகை கொற்றன்.

அக்காலத்தில் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களைப் பார்வையிட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சுவர்களில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்தது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்லறைகளைப் பார்வையிட்ட தமிழன் ஒருவன் தனது பெயரை பொறித்திருக்கக்கூடும் என்கிறது ஆய்வு உலகம். 

வரலாற்று ஆய்வாளர்கள் அனைவராலும் வைக்கப்படுகின்ற ஒரே கேள்வி..

யார் இந்த சிகை கொற்றவன்? 

சிகை என்பதற்கு, முடி, மணிமுடி, கிரீடம் என்றெல்லாம் பொருள். கொற்றன் என்றால் வெற்றி வீரன் அல்லது தலைவன் என்று பொருள் பெறுகிறது.

இந்திய தேசத்தின் பூர்வீக குடிகள் நாகர்கள், தலைகளில் நாக இலைச்சினைகளை சூடி இருக்கும் நாகர்கள், முடிநாகர்  அல்லது சூட்டு நாகர் என்று அழைக்கப்பட்டனர். 

தென்னிந்திய முடி நாகர் சேர நாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பிற சங்க இலக்கியங்கள், முடி நாகர் சேர நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை சுட்டிக்காட்டுகின்றன.

சேர மன்னர்களும் நாக வழிபாட்டாளராகவோ அல்லது நாகர்களின் வம்சாவளியினராகவோ அறியப்பட்டனர். 

சங்க இலக்கியத்தில் கொற்றன் என்ற சொல்லின் பெருமை இருக்கிறது. சேரர் பெயர்களில் பிட்டாங்கொற்றன் என்று அது ஒலிக்கிறது. 

சேர நாட்டின் வழிபாட்டுக்குரியவர்களாக காணப்படுகின்ற இந்த முடி நாகர்களைப் போலவே, தலைகளில் நாக இலைச்சினைகளை சூடி இருக்கும் இன்னொரு இன குழுவினரும் இருக்கின்றனர். 

அவர்கள்...

எகிப்தியர்கள்.

சேர நாட்டில்...
கடலை நோக்கி பார்த்தவாறு ஆதிசேஷன் மீது சாய்ந்த நிலையில் சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ பத்மநாப சுவாமி எதை பார்க்கின்றார்? 

எகிப்தை தானே..!

எகிப்தியர்கள் முடி நாகர்களா..?

கடையெழுவளர்களில் ஒருவன் ஆய் அண்டிரன். இவன் வழிவந்த ஆய் மன்னர்களை போன்றே, ஆய் எனும் பெயரில் எகிப்திய மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.

மோசி என்றால் தமிழில் மகன் அல்லது தலைப் பிள்ளை என்று அர்த்தம். நம்மூரில் முடமோசி எனும்  சங்ககாலப் அவரைப் போன்றே, 

தத் மோசி, ஆமோசி, ஹரமோசி, காமோசி, மீனமோசி என்று மோசி எனும் பெயரில் நிறைய எகிப்திய மன்னர்கள் இருந்திருக்கின்றனர்.

நைல் நதியில் ஒரு குழந்தையை கண்டெடுத்த மன்னனின்  மகள் அக்குழந்தைக்கு மோசி என்று பெயரிட்டு வளர்த்தாள்.

அந்த மோசிதான் பின்னாளில்  யூதர்களை வழி நடத்திச் சென்ற மோசஸ் என்கிறது குறிப்புகள். 

இந்தியாவில் பல அகத்தியர்கள், பல வசிட்டர்கள் இருந்தது போல,  பல விக்ரமாதித்தன்கள் இருந்தது போல, 

எகிப்து நாட்டில் ராமசெஸ் என்ற பெயரில் மட்டும் குறைந்தது பதினோரு மன்னர்கள் இருந்து  இருக்கின்றனர். 

ராமசெஸ்..?
பழக்கப்பட்ட பெயர் தான்.

சேஷன் என்றால் பாம்பு. ஆதி சேஷன் போல, ராம சேஷன் என்ற பெயர் எகிப்துக்கு சென்று ராமசெஸ் என்றாகி பின்னாளில் ரமேஷ் என்று ஃபாரின் ரிட்டர்ன் ஆகியிருக்கின்றது. 

இப்படி...

துண்டு துண்டாக அறுந்து  கிடைக்கின்ற வரலாற்றுச் சங்கிலிகளை சரியாக கோர்த்து பாருங்கள். 

சிகை கொற்றனும் முடி நாகனும் மட்டுமல்ல, எகிப்தியனும் கூட வேறு இல்லை என்கின்ற விவரம் புரியும்.

சமரன் 

#Egypt #tamil #pyramids #brami #கல்வெட்டு #தமிழ் #BreakingNews #epigraphy

செவ்வாய், பிப்ரவரி 03, 2026

களப்பிறர் ஆட்சி




பண்டைய தமிழகம்
கிபி மூன்றாம் நூற்றாண்டு
-----------------------------------

பிராமணர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இந்த அதிகார திமிர்த்தனங்களை, ஆதிக்க வெறியாட்டங்களை கண்டு கொதித்து எழுந்த அந்த அடித்தட்டு மக்களின் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக வெடித்தது.

பிராமணியத்தின் அட்டூழியங்களுக்கு இசைவளித்து, அவர்களின் அதிகார அடியாளாக மாறி போய் கிடந்த மூவேந்தர்களின் கொட்டத்தை அடக்கிய, பூர்வீக குடி மக்களின் புரட்சியால் ஏற்பட்ட அரசியல் மாற்றமே களப்பிறர் ஆட்சி.

பிரமதேயம், சதுர்வேதி மங்களம்  உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டிருந்த நிலங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலங்கள் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அரசர்களிடம் இருந்தும், அப்பாவி மக்களிடம் இருந்தும் பொருட்குவைகளை கபடமாகப் பறிக்கும் பிராமணர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. அவர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகள் ரத்து செய்யப்பட்டன.

ஏற்றத்தாழ்வுகளுக்கு போக்கு காட்டிய பிராமணிய வால் தனங்கள் ஒட்ட நறுக்கப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்துதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் அடக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன.

களப்பிறர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல; மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த பெரும் சமூக மாற்றம்.

இது போதாதா..

பின்பு ஒரு காலத்தில்..

பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுத்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?

மேன்மை மிக்க தமிழ்  நீச பாசை என்றானது போல, மேலான பறையன் கீழானவன் என்றானது போல, களப்பிறர்களின் பொற்காலத்தை. இருண்ட காலம் என்று தலைகீழ் மாற்றம் செய்தனர்.

வட இந்தியாவிலுள்ள பேரரசுகள்கூட கால்வைக்க முடியாதுபோன தமிழகத்தில் கன்னடர்கள் வந்து மூவேந்தர்களை வென்று இங்கு முன்னூறு ஆண்டுகளுக்குமேல் ஆட்சி செய்தார்கள் என்று கதை கட்டினர். களப்பிறர்கள்  கன்னடர்கள் என்று கதை கட்டினர்.

அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் எழுதப்பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில் தான்.

விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

இறையனார் களவியல், பிராமியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் பரிணாமம் பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள்  மடங்கிக் கிடந்த தமிழ்ப் தமிழ்பாக்கள் தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகளாக செழுமை பெற்றதும்

இந்த இருண்டகாலகட்டத்தில்தான்.

நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த  பூச்சியபாதரின் மாணவரான வச்சிர நந்தி மதுரையில் திராவிட சங்கம் நிறுவியதும்

இந்த இருண்டகாலகட்டத்தில்தான்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பலவும் மணிமேகலையும் சிலப்பதிகாரமும்  மேன்மை பெற்றதும் புத்தமும், சமணமும் ஏற்றம் பெற்றிருந்ததும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

அதுமட்டுமல்லாது...

சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்தது,

பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான இந்த களப்பிரர்களின் இருண்ட காலத்தில்தான்.

வள்ளுவ பாட்டன் வகுத்தளித்த திருக்குறள் அரங்கேறியதும் இந்த களப்பிரர்களின் இருண்ட காலத்தில்தான்.

அரும்பெரும் மரபின் பெரும் பெயர் பெற்ற களப்பிரர்களின் பொற்கால ஆட்சியில் தான், பிராமண வேளாள அதிகார திமுத்தனங்களால் ஆதிக்க வெறியாட்டங்களால் தூக்கி எறியப்பட்டு இருந்த தமிழ் மீண்டும் அரியணை அரியணை ஏறி ஆட்சி புரிந்தது.

களத்தில் பிறந்த ஆட்சியாதலால் அதற்கு களப்பிறர் என்று பெயர் வந்தது. அந்த களப்பிறர் வேறு யாருமில்லை, களப்பறையர் தான்.

மூவேந்தர்களை அடக்கி ஒடுக்கி முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிறர்களின் அறநெறிகளின் வழிவந்த அறிவூட்டும் தலைமகன்

எங்கள் மக்கள் தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் தலைமையில் களப்பிறர்கள் எனும் மக்கள் புரட்சி மீண்டும் ஒரு நாள் வெடிக்கும்.

அன்று..!

சனாதனத்தை வேரறுப்போம்! புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுப்போம்!

சமரன்

Thol.Thirumavalavan 

#களப்பிறர்
#களப்பிறர்_பொற்காலம்
#இருண்டகாலமல்ல
#மக்கள்புரட்சி
#அடித்தட்டு_வரலாறு
#பண்டையதமிழகம்