செவ்வாய், செப்டம்பர் 10, 2024

நற்குழவி

ஆதன் என்பது தமிழ் மரபில் தோன்றிய தொன்மையான பெயர். அதற்கு தலைவன் என்றும், அரசன் என்றும் பொருள்படும். "வாழியாதன்" என்று சங்க இலக்கியங்கள் தலைவனை விளிக்கின்றன. "நெடுஞ்சேரலாதன்" போன்ற மன்னர்கள் பெயர்களும் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைகின்றன. ஆகவே ஆதனூர் என்பது ஒரு காலத்தில் அரசனாக இருந்த ஒருவரின் பெயரால் அழைக்கப்பட்ட ஒரு ஊர். அங்கிருந்தவர்கள் அரச வம்சத்தவர்களாக இருந்தனர். 

தியாகச் சாம்பான் மகளுக்கும், சோழ மன்னனுக்கும் மகனாகப் பிறந்த குழந்தைக்கு நந்தன் என்று தங்களது வம்சாவழி பெயரை வைத்தனர். அந்த நந்தன் சோழ மண்டலத்தில் அரசாட்சி செய்தான் என்கிறது தஞ்சை வேதநாயக சாஸ்திரி தொகுத்த ஓலைச்சுவடி (கோகில அம்பல அன்பானந்தன், பக்கம் 17)
சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் நந்தன் ஒரு பௌத்த அரசனாகக் குறிக்கப் பெறுகிறார். மகத நாட்டு மன்னர் வம்சத்திலும் நந்தன் என்னும் மன்னன் உண்டு. கபிலவஸ்துவின் இளவரசனாக இருந்தவர்களில் ஒருவர் நந்தன் என்று இரேனியஸ், ஓல்டன்பர்க் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

சமண, பௌத்தக் காலக் கணிப்புப்படி பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுக் கணக்கில் 26 ஆவது ஆண்டாக 'நந்தன' வருகிறது. அவ்வாண்டில் பிறக்கும் அரசரின் குழந்தைக்கு நந்தன் (தமிழில் நற்குழவி) என்று பெயரிடுதல் வழக்கமாக இருந்தது. 

மகத நாட்டிலிருந்து இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்களே நந்தர்கள் தான்.  இப்படியெல்லாம் இருந்த நந்த வம்சத்தின் கதைகள் திட்டமிட்டு திரிக்கப்பட்டது. இந்திரன் இறக்கம் செய்யப்பட்டு சிவன் ஏற்றம் செய்யப்பட்ட போது 

நந்தர்களின் தனிக்கோயில்கள் தடை செய்யப்பட்டன. நந்தர்கள் வெளியேற்றப்பட்டனர். ஏறக்குறைய கிபி எட்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்புவரை சிவன் கோயில்களில் நந்தி இல்லை என்பதற்கு குடிமங்கலம் புராதான சிவன் கோயில், சதுரகிரி சாய்ந்த லிங்கம், ஆற்றுக்கரை லிங்கங்கள், கடற்கரை லிங்கங்கள் , காடு மேடுகளில் வழிபாடு லிங்கங்கள் சாட்சியாக நிற்கின்றன. 

சூழ்ச்சியால் வென்றவர்களால் சிவலிங்கம் கோயிலுக்கு உள்ளே போனது.  தோற்ற நந்தர்களை கோயிலுக்கு வெளியே முட்டிப்போட வைத்திருக்கிறது நந்தி எனும் பெயரில்.. 

இன்னும் யுத்தம் முழுமை பெறவில்லை 
நிச்சயம் வெல்வோம்! நந்தனை விடுதலைச் செய்வோம்!

#நந்தன்5

முந்திப் பிறந்தவன் நான்

‘பறையர்கள் ஒருகாலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். தென்னிந்தியாவின் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆதிதிராவிடர்களின் பூர்வீக சரித்திரம் என்ற நூலை எழுதிய டி. கோபால் செட்டியார் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேப்போன்று அபிதான சிந்தாமணியிலும்  தமிழ்நாட்டு புராதனக்குடிகள். ஒருகாலத்தில் பலமுள் கூட்டத்தினர் இவர்களுக்கு பூணூல் உண்டு இவர்கள். இவர்கள் பிராமணர்களை ஒத்தவர்கள். பிராமணர்களின்  வருகைக்கு முன் அந்த இடத்தில் பறையர்களே  இருந்தனர். இவர்கள் இருக்கும்  இடத்திற்கு மற்றவர் வரக்கூடாது’ என்றெல்லாம் செய்தி வருகிறது.

முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் காண் – பறையர்களின் தொண்ம பாடலும் 

பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் என்ற சொல்வழக்கும் இவைகளை உறுதிசெய்கிறது.  சேரிக்குள் பார்ப்பனரை பார்த்துவிட்டால் சாணியை  சட்டி கரைத்துக்கொண்டு அதிலே துடைப்பத்தை முக்கி பார்ப்பனரை அடிக்க ஓடுவர். அவர் மீது சாணி சட்டியை உடைப்பர் எனும் செவி வழி கதையாடல்கள் பார்ப்பனர் வருகைக்கு முன்பு அந்த இடத்தில் பறையர்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தீராப்பகை உண்டு என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

பறையர்களின் வேத எதிர்ப்பால் தோற்றுப்போனவர்களின்  வழிவந்தவர்கள் அவர்களது தலைமுறைகள் வேத எதிர்ப்பு மரபிலிருந்து நந்தனின் வரலாற்றை எடுத்து அவனின் பிம்பத்தை சீர்க்குலைப்பது, இழிவுப்படுத்துவது பறையன் மன்னனாக இருந்தான் என்பதை வரலாற்றிலிருந்து துடைத்தெறிய செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது. 

#நந்தன்4