செவ்வாய், செப்டம்பர் 10, 2024

முந்திப் பிறந்தவன் நான்

‘பறையர்கள் ஒருகாலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். தென்னிந்தியாவின் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆதிதிராவிடர்களின் பூர்வீக சரித்திரம் என்ற நூலை எழுதிய டி. கோபால் செட்டியார் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேப்போன்று அபிதான சிந்தாமணியிலும்  தமிழ்நாட்டு புராதனக்குடிகள். ஒருகாலத்தில் பலமுள் கூட்டத்தினர் இவர்களுக்கு பூணூல் உண்டு இவர்கள். இவர்கள் பிராமணர்களை ஒத்தவர்கள். பிராமணர்களின்  வருகைக்கு முன் அந்த இடத்தில் பறையர்களே  இருந்தனர். இவர்கள் இருக்கும்  இடத்திற்கு மற்றவர் வரக்கூடாது’ என்றெல்லாம் செய்தி வருகிறது.

முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் காண் – பறையர்களின் தொண்ம பாடலும் 

பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் என்ற சொல்வழக்கும் இவைகளை உறுதிசெய்கிறது.  சேரிக்குள் பார்ப்பனரை பார்த்துவிட்டால் சாணியை  சட்டி கரைத்துக்கொண்டு அதிலே துடைப்பத்தை முக்கி பார்ப்பனரை அடிக்க ஓடுவர். அவர் மீது சாணி சட்டியை உடைப்பர் எனும் செவி வழி கதையாடல்கள் பார்ப்பனர் வருகைக்கு முன்பு அந்த இடத்தில் பறையர்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தீராப்பகை உண்டு என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

பறையர்களின் வேத எதிர்ப்பால் தோற்றுப்போனவர்களின்  வழிவந்தவர்கள் அவர்களது தலைமுறைகள் வேத எதிர்ப்பு மரபிலிருந்து நந்தனின் வரலாற்றை எடுத்து அவனின் பிம்பத்தை சீர்க்குலைப்பது, இழிவுப்படுத்துவது பறையன் மன்னனாக இருந்தான் என்பதை வரலாற்றிலிருந்து துடைத்தெறிய செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது. 

#நந்தன்4

கருத்துகள் இல்லை: