செவ்வாய், மே 28, 2024

மாட்டுக்கறி தராததால் சிவபெருமான் செய்த கொலை..?

ஞாயிற்றுக்கிழமை.!

நனைந்த உடையோடு நின்றிருந்த ஸ்ரீபிரியா ரஜினியை பார்த்து 'நதியோரம் நாணல் ஒன்று..' பாடிக்கொண்டிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்தேன்.

வெளியூர் தம்பிவொருவன் வந்திருந்தான். நீண்ட நெடிய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, சாப்டியா? இட்லியும் பீப்பும் இருக்கு தம்பி கொஞ்சம் சாப்டேன் என்றேன். 

அய்..அய்யே நாங்  பீப்பெல்லாம் சாப்பிடுறதில்லை அண்ணா! என்றான்  பதட்டத்துடன். 

ஓகே ஓகே... சாப்டலனா தப்பில்ல. அது என்ன ? அய்அய்யே.. என்றேன் சிரித்துக்கொண்டே.

மாட்டிறைச்சியை இழிவாக போக்கு நம்மிடையே இருக்கு, பட். நம்மை போன்ற சாமான்ய மக்களுக்கு மாட்டுக்கறி ஒன்றும் லேசில் கிடைத்து விடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய பெரிய ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் பரிமாறப் படுகின்ற மிகப்பெரிய விருந்துகளில்  மாட்டிறைச்சி கட்டாயம் இடம்பெறும். 

மற்ற இறைச்சிகளை கொண்டு எவ்வளவு தடபுடலாக படைக்கப்பட்டாலும், பரிமாறப்பட்டாலும்  அதுவொரு சராசரி விருந்து தான். ஆனால் மாட்டிறைச்சியோடு படைக்கப்படும் விருந்தே உயர்ந்த விருந்தாகிறது. மாட்டிறைச்சி விருந்தே தான்  ராஜ விருந்து.. என்றேன்.

நம்புவதா? நம்பாமல் இருப்பதா? 
என்று புரியாமல் இருப்பது அவனது பார்வையில் தெரிந்தது.

தேயிலை தோட்டத்தில் ஆடிப்பாடிக்கொண்டிருந்த ரஜினியையும் ஸ்ரீ ப்ரியாவையும் கொஞ்சம் breeze செய்துவிட்டு அவனை தொடர்ந்தேன்..

பழந்தமிழர்கள் தீயோம்பும் அதாவது வேள்வி நடத்தும் வேத கலாசாரத்தைப் பின்பற்றியும் ஆதரித்தும் வந்துள்ளனர். 

யாகத்தீயில் மாடு உள்ளிட்ட விலங்குகளை, பொருட்களை போடுவதற்கு ஆகுதி என்பது பெயர். எழுதா கிளவியில் அதற்கு ஆஹூதி, இந்த யாகத் தீயில் நல்லா வெந்த அதாவது அவிந்து பொருட்களை பங்கு பிரிப்பதற்கு அவிஷ் பாகம் அல்லது அவிர்பாகம் என்று பெயர்.  

யாகத்துக்குப் பிறகு இந்த அவிர்பாகம் அதாவது அவிச்ச கறியை,  ரொம்ப ஈஸியா சொல்லனும்னா இந்த க்ரில்டு, தந்தூரி யெல்லாம் இருக்குல்ல அதைப்போல இருக்கின்ற அவிர் பாகத்தை வந்திருக்கும் அனைவருக்கு பங்கிட்டு  விநியோகிக்கப்படும்.

இந்த அரிச்சந்திரா கல்லாண்ட கூட மாட்டுக்கறி யார் யாருக்கு பாகமாக போகும் அப்படின்னு பாடுவாங்க தெரியுமா..?

சொல்லிமுடிப்பதற்குள்,
இல்லண்ணா, முன்னெல்லாம் எப்பயாவது பிரண்ட்ஸ்ங்க கூட சாப்பிடுவேன். இப்ப சுத்த சைவம். அதாங்..

தனக்கு மாட்டுக்கறி தரலைனு கோவப்பட்ட சிவப்பெருமான் ஒரு கொலையே செஞ்சுருக்காரு தெரியுமா ? 

பெரும் அதிர்ச்சிக்கு பின் மீண்ட அவனைக் கண்டு கொள்ளாமலே சொல்லத் தொடங்கினேன்.

ஒரு முறை பிரஜாபதிங்க சேர்ந்து யாகம் நடத்தி நடத்திய கறியை பங்குப் போட்டுக்கொண்டிருந்தனர். மாமனாராகிய தட்சன் வரும்போது அங்கிருந்த மருமவ புள்ள  பரமசிவன், அவருக்கு எழுந்திருந்து மரியாதை கொடுக்கல.  கோவம் வந்த தட்சன் இனி உனக்கு ஒரு உமுறுகறி கூட கிடையாது என்று கூறி சிவபெருமானை அசிங்கப்படுத்திட்டான். அன்னிகிலருந்து தட்சனும், பரமசிவனும் பகையாகிட்டாங்க.

கொஞ்சம் கழித்து தட்சன் நடத்திய மிகப் பெரிய யாகம் நடத்தி ராஜா விருந்து ரெடி பண்ணி இருந்தான். அந்த மாட்டுக்கறி விருந்துக்கு பரமசிவன்  பார்வதி அழைக்கப்படவில்லை. 

சரி விடுங்க எங்க  அப்பாரூ தானே, நான் கேட்டா தரவா மாட்டாரு? நான் போயி வாங்கி வரேன்' அப்படினு சொல்லி  பார்வதி பங்குப்போடுற எடத்துக்கு போனாங்க, 

அங்க அவங்களுக்கு ரெஸ்பான்ஸ் இல்ல. எல்லோரும் அந்த அம்மாவை ஷேம் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு அசிங்கமா போயிடுச்சு . அவமானம் தாங்க முடியாது பார்வதி அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் துறந்துட்டாங்க. 

விஷியத்த கேட்டு டென்ஷன் ஆன சிவ பெருமான் அந்த யாகத்தையே சூறையாடி, அங்கிருந்தவர்களை அடித்து துவம்சம் செய்து தட்சனின் கதையை கொய்தார்.

அன்றிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை ஒவ்வொரு யாகத்தின் போதும் அவிர் பாகம் துணி போர்த்தி மறைத்து கொண்டு சென்று சிவபெருமானுக்கு படைக்கப்படுகிறது..என்றேன்.

தம்பி சிரித்துக் கொண்டிருந்தான்.

மாட்டை மட்டுமல்ல; வேதத்தையும் தோலுரித்துக் காட்ட வேண்டியது நமது கடன் அன்றோ..?

சமரன் 
28:05:2023

#Beef|#Vedicreligion|#lordofShiva|#dakshin

கருத்துகள் இல்லை: