ஞாயிறு, மே 26, 2024

ஆசீவக புத்தர்

புத்தரின் இயற்பெயர் சுகிதி 
கெளதமியின் மகன் என்பதால் கௌதம் சுகிதி புத். 

ஒளி மிகுந்த வெள்ளை யானை தாமரை மலரை பரிசாக தந்து தன் உடலில் புகுந்து கொண்டதாகக் கனவு கண்டார் மஹாமாயா ராணி. அதன் பிறகு கருவுற்று புத்தரை ஈன்றார். கிமு இரண்டாம் நூற்றாண்டில் நடந்த இந்நிகழ்ச்சி பர்ஹித் என்ற இடத்திலுள்ள ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளை யானையும் தாமரை மலரும் பழைய சமணமான ஆசீவகத்தின் குறியீடுகள் என்பதோடு, புத்தர் ஆசீவக சமணத்தின் கொடை என்பது மாயா கனவின் மறைப் பொருள். அதனால் தான் புத்தர் சமணத்தின் தத்துவார்த்தங்களை தனக்கான பாணியில் முன்னெடுத்து பௌத்தத்தை தோற்றுவித்தார். ஆசீவக சித்தர்களின் மரமான அரசை மரத்தடியில் ஞானம் பெற்று புத்தர் ஆனார். பூரணம் என்றால் முழுமை. முழு நிலா நாளில் புத்தரும் முழுமை அடைந்தார். சுகிதி யாக அவதரித்து, புத்தராக ஞானம் பரிபூரணம் அடைந்த வைகாசி விசாக பௌர்ணமி நாளே புத்த பூர்ணிமா.

சனாதனத்தை வேரறுக்க ; சனநாயகத்தை வென்றெடுக்க முழுமூச்சாக போராடிவரும் பெளத்த உறவுகள் யாவருக்கும் இனிய புத்த பூர்ணிமா நல்வாழ்த்துகள்!

மகிழ்வுடன் 
சமரன் 

 #BuddhaPurnima | #Buddha | #BuddhaDay | #BuddhaPurnima2024 | #Peace

கருத்துகள் இல்லை: