செவ்வாய், செப்டம்பர் 10, 2024

நந்தன் ஒரு பறையன்

நந்தன் ஒரு பறையன் அவனொரு அடிமை, பண்ணையடிமை, அதுவும் பார்ப்பானின் கொத்தடிமை என்று கோபாலக் கிருஷ்ண பாரதியார் எழுதிய கற்பனை கதை செய்திதான் முதன்மைப்படுத்தப்பட்டது. இதுவொரு வரலாற்று நிகழ்வு என தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்களின் மனங்களில் மட்டுமல்ல, இலக்கியங்களிலும், நிகழ்த்துக் கலைவடிவங்களிலும் நீக்கமற பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஓர் அடிமைக் கற்பனைக் கதையைப் படைத்ததற்காகக் கோபாலகிருஷ்ண பாரதியார் அப்போது பெரிதும் பாராட்டப்பட்டார். பார்ப்பன உலகம் அவரை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியது. காந்திய அமைப்புகள் நந்தன் நாடகத்தைத் தேச விடுதலைப் போராட்டமாக உருவகப்படுத்திக் கொண்டாடின. தங்கள் மீது சுமத்தப்பட்ட சாதி, அடிமை ஆகிய தளைகளில் இருந்து விடுதலை பெறப் போராடாமல், பார்ப்பானாக மாறுகின்ற எளிய வித்தையைக் கற்றுத் உயர்வடைகின்ற கதாபாத்திரம் சாதிய ஆதிக்கவாதிகளுக்கும் மதவிற்பனர்களுக்கும் நிறைவாக இருந்தது. 

நந்தன் கதையை அவர்கள் கொண்டாடியதற்கு பின்னால் ஒரு வலுவான நோக்கம் இருந்தது. அதாவது நந்தன் ஒரு மாமன்னன், பேரரசன் என்பதை இரட்டடிப்பு செய்திட,    அந்த வரலாற்று உண்மையை  ஆழ குழித்தோண்டி புதைத்திட,  அவர்களுக்கு ஒரு அடிமை நந்தன் தேவைப்பட்டான். ஆகவே அவன் கொண்டாடப்பட்டான்.

#நந்தன்3

கருத்துகள் இல்லை: