புதன், ஏப்ரல் 27, 2011

என்ன செய்ய போகிறீர்கள்?

மயிலின் ஆட்டத்தை
குளிருக்கு நடுங்குவதாக எண்ணி
போர்வை போர்த்திய கும்பலே ! 
பசுவுக்காக மகனை பலி தந்த கூட்டங்களே !
வாடிய பயிரை கண்டு மனம் வருந்திய  நெஞ்சங்களே  !
புறாவுக்காக தன் சதையறுத்த  தேசமே ! 
இதோ
ஒரு இனம் கொத்து கொத்தாய்..
கும்பல் கும்பலாக..
ஒரு துளி மனிதம் இன்றி கொடுரமாக பச்சை படுகொலை செய்யப்பட்டிருக்கிறதே
என்ன செய்ய போகிறீர்கள்?




கருத்துகள் இல்லை: