மயிலின் ஆட்டத்தை
குளிருக்கு நடுங்குவதாக எண்ணி
போர்வை போர்த்திய கும்பலே !
பசுவுக்காக மகனை பலி தந்த கூட்டங்களே !
வாடிய பயிரை கண்டு மனம் வருந்திய நெஞ்சங்களே !
புறாவுக்காக தன் சதையறுத்த தேசமே !
இதோ
ஒரு இனம் கொத்து கொத்தாய்..
கும்பல் கும்பலாக..
ஒரு துளி மனிதம் இன்றி கொடுரமாக பச்சை படுகொலை செய்யப்பட்டிருக்கிறதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக