வியாழன், ஜனவரி 23, 2025

ஆரியர்கள், திராவிடர்கள், தமிழர்கள் பூர்வீகம் என்ன?


ஆரியர்களும் திராவிடர்களும் இனக் குழுக்கள் அல்ல ; பயண குழுக்கள். ஒரே நிலத்திலிருந்து கிளம்பிச் சென்ற இரு பெரும் பயண குழுக்கள்.

இந்த இரு குழுவினரையும் பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, ஆழிப்பேரலை எதிர்கொண்டு பூர்வீக மண்ணிலேயே போராடி வாழ்ந்தவர்கள் நாகர்கள். நாகர்களின் தலைவனை பிரான் என்று அழைப்பது மரபு.

அதைப் போன்றே

சமஸ்கிருதத்தை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நிலம் வழியே பயணப் பட்டவர்கள் தங்களது மூப்பர்களை ஆர்ய என்று அழைத்துக் கொண்டனர்.

தமிழை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நீர் வழியே பயணப்பட்டவர்கள் தங்களது வழிகாட்டிகளை திராவிட என்று அழைத்துக் கொண்டனர்.

பிரான் என்பதும் ஆரிய என்பதும் திராவிட என்பதும் மரியாதைக்குரிய டைட்டில்கள். இவை அனைத்தும் நாகர்களின் தலைவர்களை, மூப்பர்களை, வழிகாட்டிகளை அடையாளப் படுத்துகின்ற Noble titles.

பின்னாளில்..
சமஸ்கிருதத்தை ஆரியம் என்றும் தமிழை திராவிடம் என்றும் பைந்தமிழர் எழுதியும் பேசியும் வந்தனர்.

சான்றாக..

வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் #த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்கிறார் தாயுமானவன்.

பாடலின் பொருள் :
வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன்.

அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் தாயுமானவர்.

பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் #த்ராவிட வேத ஸாகரம்.

பாடலின் பொருள் :
ஸ்ரீமன் நாரணனின் பக்தர்களுக்கு பருகதற்கினிய அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும், பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும், மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள் கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதுமான தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.

அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் நாதமுனி.


#ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே'

(தமிழ் தாய் வாழ்த்து)

பாடலின் பொருள் :
உலக வழக்கு அழிந்து ஒழிந்த சமஸ்கிருதம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே

அதாவது சமஸ்கிருதம் என்ற வார்த்தைக்கு நிகராக ஆரியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை.

அன்னையும் (தமிழ்) பிதாவும் (சமஸ்கிருதம்) முன்னறி தெய்வம்.

தமிழ் எமது பேச்சு மொழி, சமஸ்கிருதம் எமது குறியீட்டு மொழி. தமிழ் என்பது மக்கள் மொழி. சமஸ்கிருதம் என்பது அறிவர் மொழி, இரண்டுமே தமிழர் மொழி ; அது எமது நாகர் மொழி!

உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகின்ற மெசபடோமியா நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், சீன நாகரிகம் உள்ளிட்ட உலகின் தொன்மையான நாகரீகங்களை படைத்ததும் நாகர்களின் இரு பெரும் ஆர்ய, திராவிட பயண குழுக்களே. பின் இந்த இரு குழுக்களும் தாய்நிலம் தேடி நாவலன் தேயம் வந்தடைந்தனர்.

உலகம் முழுவதும் சிதறிய தமிழன் உருவாக்கிய நகரங்கள் யாவும் எமது ஊரே! அங்கு வாழ்கின்ற யாவரும் எமது உறவே! என்பதை உணர்த்திட தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் எம் முப்பாட்டன்.

ஆனால்..

சுய சிந்தனையற்ற காப்பி பேஸ்ட் கும்பல்கள் திராவிட போலிகளின் மூலம், தமிழ் தேசிய போலிகளின் மூலம் பொய்யான பரப்புரைகளால்,

சமஸ்கிருதத்தை தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்தியத்தைப் போன்றே திராவிடத்தையும் தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்துகின்ற போக்கு இங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களவாடப்படும் எமது அறிவுசார் சொத்துகள் | தாரை வார்க்கப்படும் எமது அறிவுசார் சொத்துக்கள் நிச்சயம் ஒருநாள் மீட்கப்படும்.

சமரன்

#பிரான் | #ஆரியர் | #திராவிடர் | #தமிழர் | #தமிழ் | #சமஸ்கிருதம் | #மொழி | #அறிவுசார்சொத்துக்கள்

கருத்துகள் இல்லை: