வியாழன், மார்ச் 18, 2010

அறிவுமதி நேர்காணல்






1) தாங்கள் சினிமாவிற்கு பாடல் எழுத வந்ததற்கான காரணம்?

கையயழுத்துப் போடத்தெரியாத… ஆனால் வேகாத வெய்யவிலும் புன்செய்க்காட்டு மண்ணை.. மழை நனைப்பதற்கும் மேலாக.. தம் வியர்வைத் துளிகளால் நனைத்து நனைத்து பயிர்களை விளைவிப்பவர்களாகவும்.. பயிர்களோடு பயிராய்ப் பாடல்களை விளைவிப்பவர்களாகவும் இருந்த எம்மூர் தாய்களில் ஒருத்திக்கு மகனாகப் பிறந்ததுதான்.. நான் பாடலாசிரியனாக வந்ததற்குக் காரணம்.


2) ஏன் சினிமாவை விட்டு விலகினீர்கள்?

திரையிசைப் பாடல் எழுதுவதை விட்டுத்தான் திரையுலகிலிருந்து விலகியிருக்கிறேன். மற்றபடி.. எம் தமிழ்ப் பண்பாட்டை வலியுறுத்தும் ஆவணப்படங்களையும்.. குறும்படங்களையும் இயக்கிக் கொண்டுத்தானே இருக்கிறேன். விரைவில் .. ஒரு முழு நீளப் படத்திற்கான அறிவிப்பும் வரலாம்.


3) நல்ல பாடல்களை கொடுத்துவிட்டு, மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக சினிமாவை விட்டு விலகியது சரியான முடிவா?

இசைப் பாடல்கள் என்பவை.. ஓர் இனத்திற்கு ஆயுள் முழுக்கப் குடிக்கிற தாய்ப்பால். தாய்ப்பாலில் நஞ்•கலக்க.. கருத்தாலும் சரி.. சொல்லாலும் சரி.. என் மனம் ஒப்பமாட்டேன் என்கிறது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்!


4) தமிழ் சினிமாவின் இடைக்காலத்தில் இளையராஜா, வைரமுத்து கூட்டணி இசை, பாடலுக்கு சம முக்கியத்துவம் கொடுத்தது. பிறகு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பின்னர் வார்த்தைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. (சில இசையமைப்பாளர்களாலும்) தற்போது வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் உள்ளது. இந்த சூல்நிலையில் நீங்கள் ஏன் சினிமாவுக்குப் பாடல் எழுதக்கூடாது?

வளர்முக நாடுகளில்... இசைப் பாடல் என்பதை.. பேருந்துகளிலும்.. மகிழ்வுந்துகளிலும்.. திருமண வீடுகளிலும்.. ஏன் இறப்பு வீடுகளிலும்.. ஏன்..ஏன் கோயில்களிலும் கூட உயிர் உருகக் கேட்பதற்குப் பதிலாக.. •யசிந்தனைகளுக்கான.. நன்பர்களோடு கலந்துப் பே•கிற குழுசிந்தனைகளுக்கான நேரங்களில் மேல் கொட்டப்படுகிற ஒலிக்குப்பைகளாகவே பயன்படுத்துகிறார்கள்.

மற்றும்..நம் இனம்.. எம் ஊர் மக்களின் வாழ்க்கையின் வலி வாங்கி வருகிற திரைப்படங்கள்.. மிக..மிக..மிகக்குறைவு. காதல் பாடல்களில்.. இலக்கிய நயமாக எழுதினாலும்.. நாளைய பெண்ணியப் பார்வையில்.. குற்றவாளியாகவே நிற்கவேண்டிய நெருக்கடி. அதுதான் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டேன்.


5) இசை அமைப்பாளர்களின் ஆதிக்கம் பாடலாசிரியர்கள் மீது எந்தளவிற்கு அதிகரித்து உள்ளது?

இசைஞானி, ஏ.ஆர். ரகுமான், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யா சாகர், சிற்பி, தினா.. என எல்லா இசையமைப்பாளர்களிடமும் நான் பணியாற்றியுள்ளேன். எவரும்.. எந்த ஆதிக்கமும் என் மீது செலுத்தியதில்லை. துள்ளல் மெட்டுக்குப் பாடல் எழுதமாட்டேன். என்று கூறி… முதன் முதலாகத் தந்தனுப்பிய மெட்டை… அழகம் பெருமாளிடம் திருப்பி அனுப்பினேன். ‘மே மாதம்’ படத்தில் வைரம் எழுதிய ‘மார்கழிப் பூவே’ போல் ஒரு மெல்லிய மெட்டில்தான் அவரோடு இணைய விரும்புகிறேன் என்றும் சொல்லியனுப்பினேன். தனது மெட்டை.. திருப்பி அனுப்பிவிட்டேன் என்று கோபப்படாமல் அப்படியா சொன்னார்.. அப்படியானால் அவரை ஒரு பாடல் எழுதச் சொல்லி எடுத்துவாருங்கள் .. மெட்டமைக்கிறேன் என்று சொன்னவர் ஏ.ஆர்.ரகுமான் நாம் நம் தன்மானத்தை உண்மையாக மதித்தால்.. நம் தன்மானத்தை மற்றவர்களும் மதிப்பார்கள்.


6) தமிழ் சினிமா கலாச்சாரத்தை சீரழக்க வழிவகுக்குகிறதா? இல்லை தமிழ் மற்றும் பண்பாட்டை காப்பாற்றும் வகையில் உள்ளதா?

அமெரிக்கத் திரைப்படங்கள் புதிய புதிய ஆயுதங்களை.. உலகிலுள்ள ஏழைநாடுகளில் விற்பனை செய்வதற்காகவே தயாரிக்கப்படுகிற நிலை.
ஈரான் போன்ற திரைப்படங்கள்.. மனித மனங்களை மேலும் மேலும் மிருதுப்படுத்துவதற்காகவே தயாரிக்கப் படுகிற நிலை.
இன்று .. ஓர் உண்மையைச் சொல்கிறேன்.. உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள்.. போதைப் பொருள்களை மீறி தமிழ்நாட்டிற்குள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
தொழிற்சாலைக் கழிவுகளால் மா•பட்டிருக்கும் ஆற்றுத் தண்ணீரை.. புதிய அறிவுகள் சூடிய இளைய வெள்ளம் மிக விரைவில் பாயும் என்று நம்புகிறேன்.
என் நம்பிக்கைக்கான முன் பெயர்கள்.. தம்பி பாலா.. சேரன்.. சீமான்.. அமீர்..பாலாஜி சக்திவேல்.. சசி.. லிங்குசாமி…


7) பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது நீங்கள் ஏன் பாடல் எழுத மறுக்கிறீர்கள்?

பெரிய கவிஞர்கள்.. சின்னக் கவிஞர்கள் என்பதெல்லாம் பாடல் உலகில் பொய். பெருங்கடவுள்கள்.. சிறு கடவுள்கள் என்கிற சொல்லாடலில் உள்ள பிழைதான் மேற் சொன்ன சொல்லாடலிலும் உன்னதாகக் கருதுகிறேன்.
நேற்று ஆடி அடங்கும் வாழ்க்கையடா எழுதிய •ரதா சின்ன கவிஞரா?
அதனால் பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது என்று சொல்லாதீர்கள்.
இப்படி வேண்டுமெனால் சொல்லலாம்.. என்னைவிட இளைய கவிஞர்களெல்லாம்,, என்னை விடவும் சிறப்பாக எழுதுவதற்கு எண்ணிக்கையில் அதிகமாக வந்திருக்கிறபோது.. நான் ஒருவன் மட்டும் விலகிக் கொள்வதில் என்ன இழப்பு ஏற்படப் போகிறது.


8) மெட்டுக்குப் பாட்டு எழுதுவது சரியா? அல்லது பாட்டுக்கு மெட்டு அமைப்பது சரியா?

ஏர் ஓட்டுகிற போது.. நடவு நடுகிறபோது என வயல்வெளி வாழ்க்கையில்.. அவர்களே மெட்டுகள் போட்டுக் கொண்டு.. அவர்களே பாடல்கள் பாடிக் கொள்கிற வாழ்வுமரபில் வந்தவர்கள் தாம் வைரமுத்துவாக இருந்தாலும் அறிவுமதியாக இருந்தாலும்.. மற்ற பாடலாசிரியர்களாக இருந்தாலும் எனவே.. எங்களுக்கு மெட்டுக்குப் பாட்டு எழுதும் ஒன்றுதான். மெட்டுள்ள சந்த ஒழுங்கில் பாடல்களாக எழுதிக் கொடுப்பதும் ஒன்றுதான்.


9) பெண் கவிஞர்கள் சினிமாவிற்கு அதிகம் ஏன் வரவில்லை? அவர்களுக்குள்ள பிரச்சனைகள் என்ன?

பெண்களுக்கான விடுதலை நேரமீது. தமிழ்கவிதை உலகில்.. இன்று மிகச்சிறந்த பெண் கவிஞர்களின் வெற்றி.. மகிழ்வூட்டுகிறது.
திரையுலகிலும்.. தங்கை தாமரையின் வெற்றி.. மெச்சத்தக்கது. தேன்மொழி .. இளம்பிறை.. கதிர்மொழி.. ஆண்டாள் பிரியதர்´னி என நீள்கிற இந்தப் பட்டியல் மற்ற மாநிலங்களில் எப்படியயன்று தெரியவில்லை. ஒவ்வொரு இயக்குநருக்கும் தம் படத்தில் ஒரு பெண் பாடலாசிரியருக்கு வாய்ப்புதருகிற.. அல்லது புதிய பெண் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிற பெரியர்வலி இருக்குமானால்.. இன்னும் வாய்ப்பாக இருக்கும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை கூடுகிறபோதும்.. மாற்றங்கள் ஏற்படலாம்.


10) சினிமா தவிர வேறு இலக்கிய பணிகளில் தற்போது ஈடுபாடு உண்டா?

‘தை’ என்கிற கவிதைகளுக்கென்றே ஓர் இலக்கிய இதழ் நடத்துகிறேன்.


11) கண்ணதாசன் சினிமாவில் பாட்டு எழுதிக் கொண்டே நூல்கள் எழுதினார். வைரமுத்துவும் அதையே பின்பற்றுகிறார். அதேபோல் உங்களுக்கு நூல்கள் எழுதும் எண்ணம் உண்டா? எம் மாதிரியான படைப்பை உருவாக்க உள்ளீர்கள்?

இது வரையில் ஏறக்குறைய 12 நூல்கள் எழுதியிருக்கிறேன். பாரதியாரைப் போல்.. பாவேந்தரைப்போல்.. ஒவ்வொரு நூலும் பாடுபொருளிலும்.. நடை வடிவிலும்.. வெவ்வெறு தன்மையில் விளையவேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கிறேன்.


12) தமிழ் இலக்கியம் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன? உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தை படைக்க என்ன செய்ய வேண்டும்? முடியுமா?

தமிழ் இலக்கியத்தில்.. சங்ககாலப் புலவர்களைப் போல.. இந்தக் கவிஞர் சிறந்த கவிதை என்று சொல்ல முடிந்ததைப் போன்ற.. ஓர் மகிழ்ச்சி தரத்தக்க.. மக்கள் மயப்பட்ட.. அனைத்துத் தரப்பினரும்.. குறிப்பாகத் தலித்திய.. பெண்ணிய.. படைப்பாளிகளும் மிகச்சிறந்த மறுதலிக்கப்படமுடியாத படைப்புகளை வழங்குகிற காலமிது.

உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தைப் படைக்க வேண்டுமானால் தமிழ்த் தரம் வாய்ந்த கருக்களைப் பாடுப்பொருள்களாகத் தேடிப்பிடிக்க வேண்டும்.

13) விருதுகள் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையயனில் அதற்கான காரணம்?

விசாரணைகளின் மீதுதான் நம்பிக்கையுள்ளது! பத்தரை ஆண்டுகள்.. கால் கடுக்க.. கால் கடுக்க.. நீதிமன்ற வளாகங்களில் நின்றிருக்கிறேன்… என் இனத்திற்காகவும்.. எம் மொழிக்காகவும்.. எழுதினேன் என்பதற்காகவும்.. பேசினேன் என்பதற்காகவும் இதனை மீறிய விருதை எனக்கு யாரால் கொடுக்க முடியும்?

ஆனாலும்.. முதல் தலைமுறையில்.. எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டு.. எழுத்தாளர்களாகவும் வருகிற தம்பி தங்கையர்கள் அடையாளப்படுவதற்கு இந்த விருதுகள்.. ஓரளவிற்குப் பயன்படுகின்றன. என்பதும் உண்மைதான்.


14) பாடல்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகரித்துள்ளதே?

இரண்டு மூன்று பேர் மட்டுமே வாழ்வதற்கு மிகப்பெரிய மாளிகைகளும்.. இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்வதற்கு ஒரே குடிசையுமாக உள்ள மோசமான சமூகத்தில்.. இரட்டை அர்த்தப் பாடல்கள் மட்டுமல்ல.. மூன்று.. நான்கு.. அர்த்த பாடல்கள் கூட உற்பத்தியாகும்.
ஒவ்வொரு கணவன் மனைவிக்கும்.. தங்கள் காமத்தை.. •தந்திரமாக அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தித்தராதவரை. இத்தகைய கேவலங்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கும்.


15) நிறைய பாடலாசிரியர்களை, இயக்குனர்களை உருவாக்கியிருக்கிறீர்களே… எப்படி?

தன் மார்பில் ஊறிக்கனக்கும் தாய்ப்பாலைத் தன் குழந்தைக்கு மட்டுமே என்று வைத்திருக்கத் தெரியாத தாய்கள் எங்களூர்த் தாய்கள். நானும் ஒரு மார்பில் பால்குடித்து வளர்ந்தவனில்லை.
தாய்ப்பாலையே அடுத்த குழந்தைகளுக்கும் ஊட்டிப் பசியாற்றி மகிழ்கிற அந்தப் புன் செய்க் காட்டு வாழ்வில் பிறந்து வளர்ந்துதான் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மற்றும்.. என் கவி ஆசான் அப்துல் ரகுமான் அவர்கள்.. தமக்கான விலை மதிக்கப்படமுடியாத இரவுகளை.. வளரும் கவிஞர்களுக்காகத் தந்து உதவிய அனுபவங்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை: