வியாழன், ஜனவரி 12, 2012

மாயன் -அழித்தொழிக்கப்பட்ட தமிழன் -3



இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும் வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. சூரியன்,சந்திரன்புதன்சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர். 

தவிர பூமிக்கடியில் சேமிப்புக் கிடங்கு தோண்டி ,உணவுப் பொருட்களைப் பாதுகாத்தனர். இது பஞ்சகால உணவுத் தட்டுப்பாட்டை நீக்கியது. ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைந்தனர்,சிற்பங்கள் செதுக்கினர், கலைக் கூடங்கள் அமைத்தனர், அணிகலன்கள் உருவாக்கினர். ஓவியங்களில் "டர்கிஷ் ப்ளூ " என்ற நீல வண்ணத்தை அதிகம் உபயோகித்தனர். இதுதான்   மாயன் நீலம் இன்றும் அழைக்கப்படுகிறது.



இவ்வாறு.. ஏழாம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் 900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்து போனது.  மாயா நகர பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்று கிடந்தது. எங்கு போனார்கள் என்பது இன்றுவரை விடைதெரியா கேள்வி.
           
மாயாக்களின் கலை திறன் மிகவும் நுட்பமானது, சிற்ப கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும்.

இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விஷயம்  மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதான்ங்கள் ‘I’ ‘ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.


மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில்செதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் நீர் மேலாண்மை அறிவு மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது. தற்போது தென் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குளம் , இதற்கான சான்று. மழைநீர் சேமிப்பு குழாயோடு இணைக்கப்பட்டுள்ளது. 

ஓடும் தண்ணீரில் நீரூற்று, கால்வாய் போக்குவரத்து, கழிவு அறை சுத்தம் செய்ய குழாய் அமைப்பு போன்றவை அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளது.  தண்ணீரை அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதன் இயல்பு ஓட்டத்தை தங்களுக்கு ஏற்ற வாறு மாற்றிக் கொண்டுள்ளனர்.

 அதற்காகப் பெரிய துளை, பின் அதைச் சிறியதாக மாற்றியது போன்ற கணித அறிவியல் அமைப்புகளும், வட்ட வடிவ கால்வாய் அமைப்பு , நீர் கடத்தியாகச் செயல்பட்டதையும் இன்றளவும் ஆச்சரியங்கள். தண்ணீர் மூலமாக சக்தியை திரட்டி அதைப் பல விதங்களிலும் உபயோகித்தனர். 216 அடி நீள வாய்க்கால், 20 அடி உயர நீர் வீழ்ச்சி , 150 மீ.தூரத்திற்குத் தண்ணீரைக் கடத்தியது , அதை விவசாயத்திற்காக ,பாசன அமைப்பாக மாற்றிக் கொண்டது போன்றவை இவர்களின் அசாத்தியமான நீர் மேலாண்மைத் திறனை வெளிப்படுத்துகிறது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மைகள்.



இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் தான் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது. 



1 கருத்து:

தமிழ் தேசியத்தின் குரல் சொன்னது…

1-மாயன் -அழித்தொழிக்கப்பட்ட தமிழன்
2-சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்?
PLESE CLICK LINK-http://arulakam.wordpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/
.ARULAKAM WORDPRESS.COM
-இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
! PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED