வியாழன், ஜூன் 20, 2024

திராவிடம்

சமஸ்கிருதத்தில் (द्रव).த்ரவ என்கின்ற சொல்லுக்கு நீர் என்று பொருள். த்ராவகம் என்றால் செய்நீர். த்ராதி,  த்ராதும், த்ராவயதி, போன்ற சொற்களுக்கு ஓடுகின்ற, ஓடுவதற்கு வசதியான, என்றெல்லாம் பொருள். 

சமஸ்கிருதத்தில் इड/ इडा அதாவது இட என்றால் நிலம் அல்லது பூமி, ஆக द्राव +इड=> द्राविड. அதாவது த்ராவிட என்றால் நீர் ஓடுகின்ற, ஓடுவதற்கு வசதியான நிலம் அல்லது பூமி. 

அருவிகள் கொட்டுகின்ற, ஆறு பாய்கின்ற பகுதிகள் த்ராவிடம் என்றும் அங்கு குடில் அமைத்து வசித்து தமிழ் செய்த, மொழி இலக்கணம் செய்த ஞானிகள், முனிவர்கள், சாதுகள், அறிஞர் பெருமக்கள் த்ராவிடர் என்று அழைக்கப்பட்டனர். 

இப்படி நீரைக் குறிக்கின்ற சொல் நிலத்தைக் குறிக்கின்ற சொல்லாக மாறி பின்பு அது அறிவர்களை குறிக்கின்ற சொல்லாக மாறிப்போனது. அதன் பின் அது பார்ப்பனர்களை குறிக்கும் சொல்லாகவும் வளர்ந்து எழுந்தது. 

பிற்காலத்தில், தெற்கு குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, தெலங்கானா, சீமா ஆந்திரா, ஒரிஸ்ஸா, கர்நாடகா, தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய நிலப்பரப்புகளை  த்ராவிட என்று குறிக்கப் பெற்று, த்ராவிட எனும் சமஸ்கிருத சொல்லுக்கு தென்புலம் என்று பொருள் அகராதி கொடுக்கப்பட்டது. 

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழர்களில் கற்று அறிந்த சான்றோர்க்கு திராவிடர் என்று பெயர் கொடுக்கலாம்..

வரலாற்றுச் செறிவுகளும் தொன்ம பின்புலமும் நிறைந்த திராவிட எனும் சொல்லுக்கு, வேஷ பாப்பனர்களும், போலி தமிழ்தேசியர்களும் ஏன் எதிராக இருக்கிறார்கள் என்று மூலம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

ஆக, இத்தகைய வரலாற்றுத் தரவுகளை அறிந்து தான் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்கள் பறையர்களை சாதி பேதமற்ற திராவிடர்களாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர். 

ஆதி பார்ப்பனர்கள் யார் என்ற வரலாற்று உண்மைகள் மக்கள் மத்தியில் கவனம் பெறுகின்ற போது ஆதி திராவிடர் என்கின்ற பெயரில் இருக்கின்ற அறிவு மரபின் வரலாற்றுச் செறிவை யாவரும் அறியக்கூடும். 



சமரன்
19:06:2024

கருத்துகள் இல்லை: